Saturday, September 25, 2010

"புதிய தலைமுறையுடனான பயணம்”


ஒரு நாள் பத்திரிக்கையாளரானால்….” – இப்புடி Add Imageமுதல்வன் பட கான்செப்ட்ல நான் எழுதி அனுப்புன ஒரு கட்டுரைதான் தகுதி சுற்றுல என்னை தேர்வாக வச்சுது. ஒரே ஒரு நாள் பத்திரிக்கையாளரானால், எனக்குள்ள ஏற்படப்போகும் மாற்றத்தைதான் எழுதியிருந்தேன். ஆனா இந்தா வச்சுக்கோன்னு ஒரு வருஷத்துக்கு எனக்கு பயிற்சி நிருபராக வாய்ப்பு கொடுத்தது ஒரு ஜாக்பாட் அடிச்ச ஃபீல கொடுத்துச்சு. பிரஸ் அப்புடின்னு அச்சடிச்ச அந்த ஐடெண்டி கார்ட் நம்மகிட்ட இருக்குறதுல எவ்ளோ பெருமை? உண்மையிலேயே புதிய தலைமுறை டீம்ல சேர்வதற்கு முன்னாலேயே நான் ரொம்ப தீவிரமான வாசகனாத்தான் இருந்தேன். காசு வாங்காத ஒரு பிராண்ட் அம்பாசிடர் ரேஞ்சுக்கு வேலை செஞ்சேன். அப்படியிருந்த நேரத்துல, “வீடு தேடி வரும் புத்தக சேவை” அப்புடிங்கிற என்னோட முதல் கட்டுரை, என்னோட பெயரோட வெளிவரும்போது இருந்த சந்தோஷத்த வார்த்தையில சொல்லிடமுடியாது. ஆனா இன்னைக்கு அந்த கட்டுரை நடைய படிச்சு பார்த்தா எனக்கே சிப்பு சிப்பா வரும். அவ்ளோ மொக்கையாத் தெரியுற அந்த நடையிலயிருந்து இன்னைக்கு எழுதுற சுமாரான கட்டுரை நடைக்கு முன்னேறியிருக்கேன்னா, இங்க என்னை செதுக்கிய ஆசிரியர்கள்தான் அதுக்குக் காரணம். புதிய தலைமுறையோட இந்த ஒரு வருஷப் பயணத்துல, இதுவரையே எக்கச்சக்கமா தெரிஞ்சுகிட்டிருக்கேன். என்னோட கனவுலகமான ஊடகத்துறையில நான் அடியெடுத்து வைக்க வாய்ப்பிருக்குன்னு தினம் தினம் எனக்கு நம்பிக்கைக் கொடுக்குறதே நம்ம பத்திரிக்கைதான். நெறைய நல்ல மனிதர்களோட தொடர்பு, பல மாற்றுத்திறனாளிகளோட உழைப்பு, எங்க போனாலும் பத்திரிக்கை பத்தின ஒரு பாசிட்டிவ்வான பின்னூட்டம்னு கெடைச்ச மதிப்பும் மரியாதையும் என் லெவலுக்கு கொஞ்சம் அதிகம்தானோனுகூட தோணுச்சு. ஒரு மாணவனா மட்டுமே இருந்த என்னை என் வட்டத்துல ஒரு மினி செலப்ரிட்டி ஆக்கியது நம் பத்திரிக்கை. நான் எழுதின ”கனா காணும் பட்டதாரிகள்” கட்டுரையின் எதிரொலியா மெட்ராஸ் யுனிவர்சிட்டியில 150 வருஷமா நடக்காம இருந்த பட்டமளிப்பு விழா இனி நடத்தப்படும்னு அறிவிப்பு வந்துச்சு. அந்த யுனிவர்சிட்டி மாணவர்கள் நமக்கு நன்றி சொன்னதையும் மறுபடியும் பதிவு செஞ்சோம். சக்தி கார்ஸ் சக்திவேல், ஆர்.ஜே. பங்காளி ராஜா, ஞானபாரதி, பெட்ரிஷியா, மித்ரா,சிவராமன், இன்னும் எத்தனையோ பேரு என்னோட கட்டுரைகள்ல முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்காங்க. வெங்கட்ராமன், சி.எம்.சி.குரு, ராஜா, இவங்க எல்லாம் என்னோட முன்னேற்றத்துல மிக முக்கியப் பங்கு வகிக்குறவங்க. இந்த சந்தோஷமான தருணத்துல அவங்களுக்கெல்லாம் நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன். பெயர் சொன்னால் ரெண்டு ஸ்பெஷல் மலரே வெளியிடலாம். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த நம்ம “புதிய தலைமுறை”க்கும், உறுதுணையாயிருந்த என் பெற்றோர், நண்பர்கள், மற்றும் எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்போதே புதிதாய் பிறந்திருக்கும் புதிய தலைமுறைக்கு முதலாமாண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களும்.....வணக்கங்களும்...

No comments:

Post a Comment